search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலூரில் தகராறு"

    மேலூர் அருகே நாடகம் போடுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மேலூர் அருகே உள்ள புதுசுக்காம்பட்டியை அடுத்த சுவைத்தான்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கலையரங்கத்தில் வள்ளி திருமணம் நாடகம் நடத்தப்பட்டது.

    டி.செட்டியார்பட்டியை சேர்ந்த எழுவன், முத்துவேல்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது. சொக்கலிங்கம், பார்த்திபன், குமரேசன், எட்டிமங்கலம் அரவிந்த் ஆகியோர் நாடகத்தை நிறுத்த வலியுறுத்தி தகராறு செய்தனர்.

    அப்போது எழுவனை உருட்டுக்கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மேலூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பார்த்திபன் மற்றும் குமரேசனை கைது செய்தார்.
    ×